• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தடையற்ற மின்சார வழங்கலை உறுதிப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்
- இதற்கு முன்னர் அமைச்சரவையானது, தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியினை தீர்க்கும் பொருட்டு குறுங்கால, நடுத்தரகால மற்றும் நீண்டகால நடவடிக்கைமுறை தொடர்பிலான சிபாரிசுகளை செய்வதற்கு நிதி அமைச்சரையும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரையும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரையும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரையும் உள்ளடக்கி, மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானித்திருந்தது. அதற்கிணங்க, தற்போது மின்வழங்கல் துறையில் நிலவும் சூழ்நிலை காரணமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அவசரமான தேவை எழுந்துள்ளபடியால் நாட்டில் தடையற்ற மின்சார வழங்கலை பேணும் நோக்கத்திற்காக மின் அலகொன்று 26.20/- ரூபா எனும் வீதத்தில் 06 மாத காலப்பகுதியொன்றுக்கு 2019 ஆம் ஆண்டு யூன் மாதமளவில் கெரவலபிட்டியவில் அமைக்கப்படவுள்ள 200 மெகாவொட் மிதக்கும் மின்நிலையத்திலிருந்தும் மின் அலகொன்று 26.20/- ரூபா எனும் வீதத்தில் 09 மாத காலப்பகுதியொன்றுக்கு 2019 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமளவில் காலியில் நிறுவப்படவுள்ள மற்றுமொரு 200 மெகாவொட் மிதக்கும் மின்நிலையத்திலிருந்தும் கூறப்பட்ட குழுவினால் சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ள படி, கொள்வனவு செய்யும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.