2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது மாநாட்டைப் பிற்போடுதல் - 2019 மே மற்றும் யூன் மாதங்களில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்படவிருந்த அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது மாநாட்டை எதிர்வரும் பிறிதொரு திகதியில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. |