• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தடைசெய்யப்பட்ட அமைப்புகளை பிரகடனப்படுத்துதல்
- அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலின் விளைவாக நாட்டின் தேசிய பாதுகாப்பிளை உறுதி செய்வதன் பொருட்டு அதிமேதகைய சனாதிபதியாக அவருக்கு கையளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாஅதே மில்லதே இப்றாஹிம் மற்றும் விலாயத் அஸ்செய்லானி ஆகிய அமைப்புகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் 2019 05 13 ஆம் திகதியிடப்பட்டதும் 2123/2 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.