2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை மற்றும் மட்டக்களப்பு கழிவுநீர் சேகரி்ப்பு, சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் முறைமைகளை அபிவிருத்தி செய்தல் - பொலன்நறுவை மாவட்டத்தின் தமன்கடுவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 16 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 26 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கும் வசதிகளை வழங்கும் பொருட்டு நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்ட கழிவுநீர் சேகரி்ப்பு, சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் முறைமைகள் தொடர்பான கருத்திட்டங்கள் சார்பில் சாத்தியத்தகவாய்வுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |