2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய இயற்கை அனர்த்த காப்புறுதித் திட்டத்தை வலுப்படுத்துவதற்காக ஜேர்மனி நாட்டினால் வழங்கப்படும் நிதி ஒத்துழைப்பு - இலங்கையில் காப்புறுதி செய்யப்படாத அனைத்து குடும்பதாரர்களையும் காப்பீடு செய்யும் பொருட்டு இயற்கை அனர்த்த காப்புறுதித் திட்டமொன்றை தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆரம்பித்துள்ளது. இந்த தேசிய இயற்கை அனர்த்த காப்புறுதித் திட்டத்தின் நிலைபேறான தன்மையை முன்னேற்றும் பொருட்டு 2.5 மில்லியன் யூரோ பெறுமதியான தொழினுட்ப உதவியினை வழங்குவதற்கு ஜேர்மனி புனரமைப்பு வங்கியும் ஜேர்மனியின் காப்புறுதி அபிவிருத்தி மன்றமும் இணங்கியுள்ளன. அதற்கிணங்க, முன்கூறப்பட்ட நிதி ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு உரிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |