2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி விமான சரக்கு முனைய கட்டடமொன்றை நிர்மாணித்தல் - 2018 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட விமான சரக்குகளின் அளவு 280 மில்லியன் மெற்றிக் தொன்களை விட அதிகமானதென்பதோடு கடந்த 5 வருடங்களுக்குள் இந்த விமான நிலையத்தில் விமான சரக்குகளின் கையாள்கை வருடாந்தம் 8 சதவீதத்தால் அதிகரிக்கின்றமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக போதுமான ஆற்றல் விமான நிலையத்தில் இல்லாமையினால் விமான சரக்கு பிரதேசத்தில் கடும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆதலால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேலதிக இறக்குமதி விமான சரக்கு முனைய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான பெறுகை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |