2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது பயன்படுத்தப்படும் Coronary Stent கொள்வனவு செய்தல் - இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது Coronary Stent மற்றும் மருந்து கரைசலினால் அகற்றும் Coronary Stent பல்வேறுபட்ட அளவுகளில் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தெரிவுசெய்யப்பட்ட வழங்குனருக்கு 446.39 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|