• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்பதற்கு ஒருங்கிணைவாக இந்த மாணவர்களுக்கு அத்தியாவசிய வசதிகளை செய்யும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2020 - 2023 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பின் கீழ் வயம்ப, யாழ்ப்பாணம், ஶ்ரீ ஜயவர்தனபுர, பேராதனை மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 13 கருத்திட்டங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் விரிவுரை மண்டப நிர்மாணிப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ விஞ்ஞான பிரிவின் 5 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 4 ஆம் 5 ஆம் மாடிகளின் வேலைகளை பூர்த்தி செய்தல், இந்த பல்கலைக்கழகத்தின் வவுனியா பீடத்தின் வர்த்தக கற்கை பீடத்திற்கான கட்டடங்கள் உட்பட ஏனைய கட்டமைப்புகளை நிர்மாணித்தல், நிருவாக கட்டடமொன்றை நிர்மாணித்தல், கல்வி மற்றும் நிறைவேற்று பணியாட்டொகுதியினருக்கு மூன்று மாடி கட்டடமொன்றையும் கல்விசாரா பணியாட்டொகுதியினருக்கு இரண்டு மாடி கட்டடமொன்றையும் நிர்மாணித்தல். , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பொறியியல் தொழிநுட்ப மற்றும் உயிரியல் தொழிநுட்ப கட்டடமொன்றை நிர்மாணித்தல், ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ பீடத்திற்கான உத்தேச கட்டடத்தை விரிவுபடுத்துதல், பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய சிற்றுண்டிச்சாலையொன்றை நிர்மாணித்தல், அங்கு பொறியியல் பீடம் தாபிக்கப்பட்டுள்ள கட்டடத்தை விரிவுபடுத்துதல் மற்றும் களனிய பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ கல்வி பீடத்திற்காக பத்து மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணித்தல் ஆகிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.