2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கும் மக்கள் சீன குடியரசின் ஹய்னான் மாகாண வௌிநாட்டலுவல்கள் அலுவலகத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை - பெருந்தோட்டத் துறையில் செய்துகொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் பெருந்தோட்ட துறை செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து இலங்கையுடன் சீனாவின் ஹய்னான் மாகாண தூதுகுழுக்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், அத்தகைய கலந்துரையாடல்களின் போது இலங்கைக்கும் சீனாவின் ஹய்னான் மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய சாத்தி யமான துறைகள் இனங்காணப்பட்டன. ஆதலால், பெருந்தோட்டத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் சீனாவின் ஹய்னான் மாகாணத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத் திடுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நோக்கம் கருதி வரையப்பட்ட, வெப்பமண்டல விவசாய அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட மரப் பயிர்களின் பெறுமதி சேர்ப்பனவு அபிவிருத்தியிலான 'ஒத்துழைப்பு' பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |