2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராஜதந்திர மற்றும் விசேட சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் பஹரேனுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை - இராஜதந்திர மற்றும் விசேட சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பது தொடர்பில் இலங்கைக்கும் பஹரேனுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |