• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டயம் பெற்ற முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- உயர் கல்வி துறையில் கல்வி சார்ந்த ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டயம் பெற்ற முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்துகொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையைச் செய்து கொள்வதன் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பட்டயம் பெற்ற முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தில் பாடநெறிகளை கற்பதற்கு தேவையான வசதி களை ஏற்பாடு செய்வதற்கும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கணக்கிடல் பாடநெறிகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் பட்டயம் பெற்ற முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும் . இதற்கமைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டயம் பெற்ற முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.