2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புகையிரத போக்குவரத்தின் வினைத்திறனை மேம்படுத்தும் கருத்திட்டம் - இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தல், பராமரிப்பு ஆற்றலை வலுப்படுத்துதல், புகையிரத பாதுகாப்பை மேம்படுத்துதல், தொழிநுட்ப பயிற்சி நிறுவனங்களை தரமுயர்த்துதல் மற்றும் கருத்திட்ட அமுலாக்க ஆற்றலை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் புகையிர வலையமைப்பை நவீனமயப்படுத்துவதன் மூலம் புகையிர துறை தொடர்பிலான அதிகரித்துவரும் கேள்வியினை சமாளிக்கும் பொருட்டு புகையிரத போக்குவரத்தின் வினைத்திறனை மேம்படுத்தும் கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. புகையிர போக்குவரத்திற்கான பயணிகளின் ஈர்ப்பினையும் புகையிர போக்குவரத்தின் சந்தைப் பங்கினையும் மேம்படுத்துவதற்கும், வீதி நெரிசல் மீதான தாக்கத்தை தளர்த்துவதற்கும் மற்றும் நகர பிரதேசங்களின் போட்டிச் சேவைகளுக்கும், கைத்தொழில்களுக்கும் மற்றும் வழங்கல் வலையமைப்புகளுக்கும் உதவுவதற்கும் இக்கருத்திட்டம் பங்களிப்பு செய்யும். அதற்கிணங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இந்த கருத்திட்ட அமுலாக்கத்துக்குத் தேவையான நிதியுதவியினைப் பெற்றுக் கொள்வதற்காக இணக்கப் பேச்சுக்களை நடாத்தி, கூறப்பட்ட வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|