2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் யப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை - பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்திசெய்தல் மற்றும் பாதுகாப்புத் துறையில் பரிமாற்றங்களை செய்தல் தொடர்பில் இலங்கைக்கும் யப்பானுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |