• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்
- நிலையான வியாபார தொழில்முயற்சியொன்றில் உற்பத்தி அல்லது சேவை செயற்பாடுகளுக்காக ஒப்பந்த ஊழியர்களை பணிக்கமர்த்துவதன் மூலம் கூறப்பட்ட நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் தீங்கு அல்லது பிரதிகூலங்களை தடுத்து அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தின் 59அ பிரிவை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.