2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய புத்தாக்க முகவராண்மையைத் தாபித்தல் - இலங்கையின் அண்மைக்கால பொருளாதார செயற்றிறனானது கணிசமான மட்டத்தில் நிலைபெற்றுள்ள போதிலும் நடுத்தர வருமான நாடொன்றாக இருப்பதற்கு, இலங்கையின் தொழில்முயற்சியாளர் துறையானது புத்தாக்க தொழிநுட்பத்தை பின்பற்றியும், உற்பத்தித்திறனை மேம்படுத்தியும் உலகளாவிய பெறுமதி சேர்ப்பனவு செய்முறைக்கும் புதிய சந்தைகளுக்குமான அணுகுவழியினைப் பெற்றுக் கொண்டும் சிறந்த தொழில்வாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். ஆதலால் புத்தாக்க, ஆராய்ச்சி மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திக்குத் தேவைப்படும் ஒருங்கிணைப்பினை பேணும் பொருட்டு தேசிய புத்தாக்க முகவராண்மையைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. புத்தாக்கம் தொடர்பில் அக்கறைதாரர்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை இந்த நிறுவனம் மீளாய்வுசெய்து, ஒருங்கிணைத்து கண்காணிப்புச் செய்யும். இந்த நிறுவனத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு ஆற்றப்படவுள்ள பங்களிப்பினைக் கருத்திற்கொண்டு, பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் கூறப்பட்ட நிறுவனத்தை தாபிப்பதற்கும் இலங்கைக்கான புத்தாக்க மற்றும் தொழில்முயற்சியாண்மை மூலோபாயத்தை (2018 - 2022) தேசிய புத்தாக்க முகவராண்மையின் செயல்திட்டம் மற்றும் வழிகாட்டல் கட்டமைப்பாக அங்கீகரிப்பதற்கும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |