2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
SriLankan Airlines நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை - SriLankan Airlines நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு இரான் விக்கிரமரத்ன அவர்களின் தலைமைத்துவத்துடன் நிபுணர் குழுவொன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டதுடன் கூறப்பட்ட குழுவானது அது தொடர்பில் கொள்கை சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. SriLankan Airlines நிறுவனத்தின் நிதி மறுசீரமைப்பு, கூட்டாண்மை மறுசீரமைப்பு, ஒரு பயனுறுதி வாய்ந்த மூலோபாயத்திட்டம் மற்றும் செயற்பாட்டு வியாபார மாதிரியினைத் தயாரித்தல், மனிதவள மறுசீரமைப்பு, சுயாதீன பெறுகை செய்முறையொன்றை உறுதிப்படுத்தல் மற்றும் வியாபார அடையாளத்தில் கூட்டிணைந்த நலன்களை பயன்படுத்தல் தொடர்பான சிபாரிசுகளை இக்குழு செய்துள்ளது. அதற்கிணங்க பிரேரிக்கப்பட்ட சிபாரிசுகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |