2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்கு பிரேரிப்புகளைப் பெற்றுக் கொள்ளல் - கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்ந்த சம்பவத்தின் காரணமாக சுற்றுலா தொழில் முகங்கொடுத்துள்ள நிலைமையினை தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் மேலும் உரிய ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. |