• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமானப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்த
- அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தைப் பயன்படுத்தி விமான சேவைகளை மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தேவையான துரித நடவடிக்கைகளின்பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக பயணிகளின் பொதிகள் மற்றும் பொருட்களை பரிசோதிப்பதற்கு நவீன தொழினுட்பத்துடன் கூடிய உபகரணங்களை கொள்வனவு செய்து தாபிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.