2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலஞ்சம் அல்லது ஊழலை ஒழிப்பதற்காக புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தல் - இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சட்டம் மற்றும் அதற்கு இடைநேர் விளைவான சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் 70 ஆம் பிரிவை திருத்தி 2018 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க இலஞ்ச (திருத்த) சட்டமாகவும் விசாரணை ஆணைக்குழு சட்டத்தை திருத்தி அதனை 2019 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு (திருத்த) சட்டமாகவும் ஏற்கனவே சட்டமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இலஞ்சம் அல்லது ஊழலை ஒழிப்பதற்காக மேலும் வரையப்படவுள்ள புதிய இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சட்டம், இலஞ்ச சட்டத்தி்ற்கான திருத்த சட்டம் மற்றும் சொத்துக்கள், பொறுப்புக்கள் வௌிப்படுத்தல் சட்டத்திற்குரிய திருத்த சட்டம் ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக சட்டமொன்றை வரையும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |