2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கேகாலை மாவட்ட செயலகத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்தல் - கேகாலை மாவட்ட செயலகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அமைவாக நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, உரிய நிர்மாணிப்பு பணிகளை பூர்த்தி செய்து இந்த கட்டடத்தை பயன்படுத்துவற்கு மேலும் செய்யப்பட வேண்டிய நிர்மாணிப்புகள் மற்றும் உபகரணங்களைப் பொருத்துதல் என்பவற்றை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தைக் கொண்டு செய்வித்துக் கொள்ளும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |