• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் மற்றும் நாவலபிட்டிய உயர் தொழினுட்ப நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்த
- நாவலபிட்டிய உயர் தொழினுட்ப நிறுவனத்தில் 03 பாடநெறிகள் சார்பில் 119 மாணவர்களும் மன்னார் உயர் தொழினுட்ப நிறுவனத்தில் 04 பாடநெறிகள் சார்பில் 601 மாணவர்களும் கல்வி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு உயர் தரம்வாய்ந்த கல்வி சூழலையும் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்வதற்காக நடைமுறைப் படுத்தப்படவுள்ள உத்தேச கருத்திட்டங்கள் சார்பில் 1,208 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.