2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலைகளுக்கு கணனி வசதிகளை வழங்குதல் - பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை பலப்படுத்தும் நோக்கில் வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புக்கு அமைவாக பாடசாலைகளுக்கு கணனி வசதிகளை வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இரண்டாம் நிலை தரங்களுடன் கூடிய பாடசாலைகளில் கணனித் தேவைகளை நிறைவு செய்வதற்காக 160,000 லெப் டொப் கணனிகளை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியினை ஒதுக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|