• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீரிகம பிரதேசத்தில் மும்மொழிக் கல்வியுடன் கூடிய புதிய கலவன் தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல்
- துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் கம்பஹாவுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு தரம் மிக்க கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் சகல வசதிகளுடனும் கூடிய புதிய தேசிய பாடசாலையொன்றை மினுவாங்கொடை, தன்சலேவத்த என்னும் காணியிலிருந்து 20 ஏக்கர் நிரப்பரப்பில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச பாடசாலையில் ஒவ்வொரு தரத்திற்கும் 6 வகுப்புகள் வீதம் கொண்ட மும்மொழிகளிலும் கல்வி கற்கக்கூடிய பாடசாலையொன்றாக தாபிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.