• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிள்ளைகள் மற்றும் இளையோர் பற்றி வரைவிலக்கணப்படுத்துவதற்காக சட்டங்களைத் திருத்துதல்
- இலங்கையில் பல்வேறு சட்டங்களில் பிள்ளைகள் மற்றும் இளையோர் என்பது தொடர்பில் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் நிலவுகின்றமையினால் எழுந்துள்ள பல பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பிள்ளைகள் என்னும் போது 18 வயதிற்கு குறைந்தவர்களென வரைவிலக்கணப்படுத்துவதற்காக பிள்ளைகள் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் இளையோர் என்னும் போது 18 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டவர்களென வரைவிலக்கணப்படுத்துவதற்கான இளைய குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலைகள்) பற்றிய கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.