• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேரே ஏரி சார்ந்த அபிவிருத்தி பிரதேசத்தில் தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தல்
- பேரே ஏரி சார்ந்த பிரதேசம் வர்த்தக நகரமொன்றாக மாற்றப்பட்டு இந்த பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்திலும் அத்துடன் வீடுகள், வாகனத் தரிப்பிடங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் என்பவற்றுடன் முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டமாக பேரே ஏரி சார்ந்து இனங்காணப்பட்டுள்ள 83 பேர்ச்சர்ஸ் காணியில் தொடர்மாடி வீட்டுக் கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தக் காணியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்காக சுவீகரித்துக் கொள்வதற்கும் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ளும் பொருட்டும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.