2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலநிலை பாதிப்புகளை தணிக்கும் நிகழ்ச்சித்திட்டம் - காலநிலை பாதிப்புகள் காரணமாக நிகழும் ஆபத்துக்களை குறைக்கும் பொருட்டு மகாவலி, களனி, மல்வத்து, கிங், நில்வலா, அத்தனகளு, முந்தெனிஆறு ஆற்றுப்படுகைகள் அதேபோன்று கலாஓயா, தெதுறுஓயா, மஹஓயா, கல்ஓயா படுகைகள் என்பவற்றைத் தழுவும் விதத்தில் காலநிலை பதிப்புகளை குறைக்கும் பல்கட்ட கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை 8-10 வருட காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களின் கீழ் 790 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினாலும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |