2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், ஐக்கிய அமெரிக்க குடியரசின் Michigan State University என்பவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையைான்றை செய்துகொள்ளல் - தேயிலை துறைசார்ந்த தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பல்வேறுபட்ட வடிவங்களில் ஆராய்தல் தொழில் பற்றாகுறையை தவிர்த்தல், தொழில் வினைத்திறனை மேம்படுத்துதல் என்பன சார்பில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Michigan State University க்கும் இடையில் கல்வி ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்புக்குமிடையில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கல் போன்ற செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கும் விருத்தி செய்வதற்கும் தேவையான வசதிகள் செய்யப்படும். இதற்கிணங்க உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |