• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், CHEC Port City Colombo (Pvt.) Ltd., மற்றும் சீன அபிவிருத்தி வங்கி என்பவற்றுக்கு இடையே உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் CHEC Port City Colombo (Pvt.) Ltd., என்பவற்றுக்கு இடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தினால் CHEC Port City Colombo (Pvt.) Ltd., கம்பனிக்கு கடன் வழங்குபவர்களுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். CHEC Port City Colombo (Pvt.) Ltd., கம்பனி கருத்திட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து நீண்ட கால கடன் வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு செய்துகொள்ளப்படவுள்ள கடன் உடன்படிக்கை சீன அபிவிருத்தி வங்கி, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் கருத்திட்ட கம்பனி என்பவற்றுக்கு இடையில் கைச்சாத்திடும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.