2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கழிவு முகாமைத்துவம் சார்பில் சிபாரிசுகளை சமர்ப்பித்தல் - குப்பைகளை முறையாக முகாமிக்காமையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இது இயற்கை சூழலை இல்லாதொழிப்பதற்கும் காரணமாய் அமைந்துள்ளது. அதேபோன்று உரிய முறையில் குப்பைகளை அகற்றுவதற்கு அரசாஙகத்தினால் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆதலால் தேசிய பிரச்சினையொன்றாக மாறியுள்ள கழிவு பிரச்சினையை முறையாக முகாமிக்கும் பொருட்டு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஆகியோர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |