• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொடர்ச்சியான மின் வழங்கல்
- தற்போது உருவாகியுள்ள மின்சாரம் தொடர்புபட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக எடுக்கப்படவேண்டிய குறுகியகால, நடுத்தவணைக்கால மற்றும் நீண்டகால செயற்பாடுகள் சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் நிதி அமைச்சர், மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.