• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீதிகளுக்கு ஔியூட்டுவதற்காக L.E.D வீதி மின்விளக்குகளைப் பொருத்தும் கருத்திட்டம்
- தற்போதுள்ள சம்பிரதாய வீதி மின்விளக்குகளுக்குப் பதிலாக வீதிகளுக்கு ஔியூட்டுவதற்காக L.E.D வீதி மின்விளக்குகளைப் பொருத்தும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரிப்பொன்று கொரிய ரெலிகொம் கம்பனியினால் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிரேரிப்பு தொடர்பில் ஆராய்ந்து விடயங்களை முன்வைப்பதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. உத்தேச கருத்திட்டத்தின் மூலம் பெறக்கூடிய நன்மைகள் அதேபோன்று இந்த முறைமையை பயன்படுத்தி கொழும்பு நகரம் அடங்கலாக பிரதான சில நகரங்களின் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதற்கு CCTV முறைமையினை தாபித்தல், பொதுமக்களுக்கு பயன்படுத்தக்கூடிய Wifi வசதிகளை வழங்குதல் போன்ற நன்மைகள் தொடர்பில் உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு ஒளியூட்டுவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சம்பிரதாய வீதி மின்விளக்குகளுக்குப் பதிலாக வினைத்திறன்மிக்க L.E.D வீதி மின்விளக்குகளைப் பொருத்தும் கருத்திட்டத்தை கொரிய ரெலிகொம் கம்பனிக்கு வழங்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.