2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மின்சார விநியோகத்தின் நம்பகத் தன்மையை மேம்படுத்துவது தொடர்பிலான ஒத்துழைப்புக் கருத்திட்டத்தின் கீழ் 33kV விநியோக வழி மற்றும் கென்றி நிர்மாணிப்பு - இலங்கை மினசார சபைக்கு சொந்தமான விநியோக மற்றும் அனுப்பீட்டு வலையமைப்பினை பலப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியானது மின்சார விநியோகத்தின் நம்பகத் தன்மையை அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 115 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை வழங்கியுள்ளது. இந்த கருத்திட்டத்தின் மூலம் 9 பொதிகளின் கீழ் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவற்றில் 4 ஆம் பொதியின் கீழ் 33kV விநியோக வழி மற்றும் கென்றி என்பவற்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 6,781.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு சீனாவின் Qingdao Huijintong Power Equipment Co. Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |