2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்காக வழங்கப்படும் Quadrivalent Human Papilloma Virus Recombinant தடுப்பூசி புட்டிகள் 400,000 கொள்வனவு செய்தல் - நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவதாக அதிகமாகவுள்ள புற்றுநோய் வகையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இனங்காணப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கு Human Papilloma Virus தடுப்பூசி வழங்குவதானது தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக தேவைப்படும் Quadrivalent Human Papilloma Virus Recombinant தடுப்பூசி புட்டிகள் 400,000 கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1.98 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு யுனிசெப் நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |