2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மண்சரிவு உயர் ஆபத்துமிக்க வீதிகளில் மண் சரிவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் - தேசிய வீதி வலையமைப்பில் மண்சரிவு அனர்த்தத்தினை தடுக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 7,619 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட நிதியத்தினை பயன்படுத்தி உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் மேலும் எஞ்சியுள்ள 2,000 மில்லியன் யப்பான் யென்களை பயன்படுத்தி மண்சரிவு உயர் ஆபத்துமிக்க பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ள அம்பேபுஸ்ஸ - குருநாகல் - திருகோணமலை வீதியின் 10 ஆம் கிலோ மீற்றர், வெல்லவாய - எல்லை - கும்பல்வெல வீதியின் 27 ஆம் கிலோ மீற்றர் மற்றும் பெரகல - ஹாலிஎல வீதியின் 22 ஆம் கிலோ மீற்றர், 6 ஆம் கிலோ மீற்றர், 33 ஆம் கிலோ மீற்றர் என்பவற்றுக்கு அருகாமையில் மண்சரிவினை தடுப்பதற்கான நிர்மாணிப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |