2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலத்திற்கான உத்தேச திருத்தங்கள் - தற்போது நடைமுறையிலுள்ள பிணையங்கள் பரிவர்த்தனை சட்டத்தை இற்றைப்படுத்துவதற்காக புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பில் உரிய துறையில் இது தொடர்பில் அக்கறையுள்ள தரப்பினரினால் மேலும் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பங்கு சந்தையின் பயனுள்ள மூலதன சந்தை ஒழுங்குவிதிகளுக்குத் தேவையான சீராக்கல்கள் உயர் சுயாதீன தன்மையை பேணி பிணையங்கள் மற்றும் அந்நிய பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பொறுப்புக்கூறலை அதிகரிப்பதற்குமான திருத்தங்களையும் இந்த சட்டமூலத்தில் சேர்த்து திருத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |