• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூழல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019
- சனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் "புனருதய" மூன்று (03) வருட கால (2015 - 2018) சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி இலங்கையில் நிலைபேறான சுற்றாடலை உருவாக்கும் நோக்கில் சூழல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.