• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா' கண்காட்சி - அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும்
- நாடு முழுவதும் 100,000 புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி அதன் மூலம் தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா" நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கண்காட்சியானது மொனராகலை பிரதேசத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதோடு, 'அரசாங்கத்தின் - 2025 தொலைநோக்கு' என்பதன் கீழ் இதன் இரண்டாவது அநுராதபுரத்திலும் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்திலும் முறையே இந்த ஆண்டு மே மற்றும் யூலை மாதங்களில் நடாத்தப்படவுள்ளன. இந்த கண்காட்சியை தனியார் துறையின் அனுசரணையின் மீது நிதியிடப்படுவதன் மூலம் நடாத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.