• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“இந்து சமுத்திரம் : எமது எதிர்காலத்தை தீர்மானித்தல்" அமைச்சர்கள் மாநாடு - 2019
- எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் அபிவிருத்தி மையமாக மாறுவதற்கு இந்து சமுத்திரத்திற்கு ஆற்றலுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கடல் சார்ந்துள்ள நாடுகளினதும் பிரதான கப்பல் பயன்படுத்துநர்களினதும் பயன்பாட்டின் பொருட்டு இந்து சமுத்திரத்தில் கடற்பயண சுதந்திரத்தை பலப்படுத்துவதற்காக “இந்து சமுத்திரத்தில் கடல் சார் சமாதானம்' என்னும் தொனிப்பொருளின் கீழ் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் மாநாடொன்று நடாத்தப்பட்டதோடு, “இந்து சமுத்திரம்: : எமது எதிர்காலத்தை தீர்மானித்தல்" என்னும் தொனிப்பொருளின் கீழ் இந்து சமுத்திரம் சார்ந்த நாடுகளினதும் கடலை பயன்படுத்தும் 40 நாடுகளின் சிரேட்ட பிரதிநிதிகளினதும் மாநாடானது கொழும்பில் நடாத்தப்பட்டது. கொழும்பில் நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கியநாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய சமுத்திர குற்ற நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து “இந்து சமுத்திரம் : எமது எதிர்காலத்தை தீர்மானித்தல்" என்னும் தொனிப்பொருளின் கீழ் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிரேட்ட உத்தியோகத்தர்களின் கூட்டத்தையும் அமைச்சர்கள் மாநாட்டையும் கொழும்பில் நடாத்தும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.