• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை - தீகவாபி தூபியினை மீள் நிர்மாணித்தல்
- சந்தாதிஸ்ஸ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டு 1947 ஆம் ஆண்டில் பாதுகாப்பு தூபியொன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட அம்பாறை - தீகவாபி தூபியின் மீள் நிர்மாண பணிகளுக்குத் தேவையான விசேட வகை செங்கல்களை பெற்றுக் கொள்வதற்கும் இந்த மீள் நிர்மாணிப்பு பணிகளுக்குத் தேவையான ஆள்வலு பங்களிப்பை இலங்கை இராணுவத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.