2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முந்தெனிஆறு ஆற்றுப்படுகை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு சர்வதேச மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல் - சுமார் 35,500 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முந்தெனிஆறு ஆற்றுப்படுகை சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 13,200 ஹெக்டயார் காணிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை செய்தல், குடிநீர் வழங்குதல், வௌ்ளப்பெருக்கை தடுத்தல் போன்றவற்றை நோக்காக கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆற்றல் கொண்ட ஆலோசகர் ஒருவரை தெரிவுசெய்யும் பொருட்டு உள்நாட்டு வௌிநாட்டு மதியுரை நிறுவனங்களிடமிருந்து பிரேரிப்புகளை கோருவதற்கும் இந்த பிரேரிப்புகளை மதிப்பிடுவதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவொன்றை நியமிப்பதற்குமாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|