2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேலியகொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகளை வழங்கும் கருத்திட்டத்திற்குத் தேவையான காணியினை விருத்தி செய்தல் - சுமார் 190 பில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளுடனான குடியேற்றங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் நகர புத்துயிர் அளிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 40,000 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டமாக 16 கருத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, 8,380 குடும்பங்கள் இந்த புதிய மனைகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 7,400 வீட்டு அலகுகளைக் கொண்ட 12 கருத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் பேலியகொட பிரதேசத்தில் 600 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படும் காணியை சிறந்தமுறையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு Gabion சுவர்களை நிர்மாணித்தல் மற்றும் கால்வாயை சுத்திகரித்து விருத்தி செய்தல் போன்ற பணிகளை 217.34 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவின் கீழ் இத்தகைய பணிகளுக்கு நிபுணத்துவம் மிக்க இலங்கை காணி நில மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |