• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய வீடமைப்புக் குழுக்களை மீளமைத்தல்
- "சமட்ட செவன" தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஒழுங்குமுறையாக அமுல்படுத்துவதற்காக மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய வீடமைப்புக் குழுக்களை தாபிப்பதற்கு அமைச்சரவையினால் முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்போதுவரை 11,192 கிராம சேவையாளர் பிரிவுகளில் கிராமிய வீடமைப்புக் குழுக்கள் தாபிக்கப்பட்டுள்ளன. ஆதலால், ஆக்கத்திறன் வாய்ந்த விதத்தில் இந்தக் கருத்திட்டத்தின் எதிர்பார்க்கப் படும் குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் கிராம சேவையாளர் பிரிவு மட்டத்திற்கு அப்பாற் சென்று துணைக் கிராமிய மட்டத்தில் கூறப்பட்ட கிராமிய வீடமைப்புக் குழுக்களைத் தாபிக்கும் பொருட்டும் அவற்றை பிரசைகள் குடியேற்ற குழுக்களாக பதவிப் பெயரிட்டு நாட்டில் ஒவ்வொரு துணைக் கிராமத்திலும் தாபிக்கும் பொருட்டும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது