• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் - கைப்பணி அபிவிருத்தி நிலையமொன்றை இலங்கையில் தாபித்தல்
- பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஒவ்வொரு உறுப்பு நாட்டிலும் கைப்பணி கிராமங்களை தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க பிராந்தியத்தின் குறைந்த வருமானம் பெறும் கைவினைஞர்களின் நலனை மேம்படுத்துவதில் உதவி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, தேசிய கைப்பணிச் சபைக்கு சொந்தமான பொல்கொல்ல கைப்பணி அபிவிருத்தி நிலையத்தை சார்க் கைப்பணி அபிவிருத்தி நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சார்க் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் சார்க் கைப்பணி அபிவிருத்தி நிலையத்தை தாபிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.