• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரிப்பதற்கான திருத்த சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தினை கோருதல்
- அரசாங்க உத்தரவாதமின்றி அடுக்கு II (Tier II) ஒழுங்குறுத்தல் மூலதன நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு தொகுதிக் கடன்களை வழங்குவதற்கு மக்கள் வங்கிக்கு அதிகாரமளிக்கும் நோக்குடனும் மக்கள் வங்கியின் தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனமாயிருக்கும் 01 பில்லியன் ரூபாவைக் கொண்ட பங்கு மூலதனத்தை 50 பில்லியன் வரை அதிகரிக்கும் நோக்குடனும் 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்துவதற்கு அமைச்சரவையினால் முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க வரையப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலமானது அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் கூறப்பட்ட சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.