2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை குடியமர்த்துதல் - நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை காரணமாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்த கிட்டத்தட்ட 577 குடும்பங்கள் இன்னமும் 25 நலன்புரி முகாம்களில் வாழ்கின்றனர். இவற்றில் 381 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.. எவ்வாறாயினும், அவர்களை மீள குடியமர்த்துவதற்கு அரச காணிகளை குறித்தொதுக்குதலானது, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அரச காணிகளின் பற்றாக்குறை காரணமாக தீவிரமான பிரச்சினையொன்றாக மாறியுள்ளது. ஆதலால், இந்தக் குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் பொருட்டு பிரதான விலைமதிப்பீட்டாளரின் விலை மதிப்பின் அடிப்படையில் தனியார் காணி உரிமையாளர்களிடமிருந்து காணி களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ் வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச் சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|