• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
- உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த வதிவிடதாரிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் மாதாந்த வாடகையை, அவர்களுக்கு மாற்றீடான காணிகள் வழங்கப்படும் காலம் வரை, நீடிப்பதற்கு அமைச்சரவையினால் முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கூறப்பட்ட கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த ஆட்களை மீளக் குடியமர்த்துவதற்காக பண்டாரவளை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட காணியை ஆயத்தம் செய்யும் வரை, அவர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவுகளின் காலப்பகுதியை மேலும் 03 மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.