• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்குத
- பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த கூலியை 750/- ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு தொழிற்சங்கங்களுக்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இவ்வதிகரிப்பானது போதுமானதல்ல என்று பெருந்தோட்டத் துறையில் அதிருப்தி நிலவுவதுடன் இது குறித்து செய்யப்பட்ட பிரதிநிதித்துவ கருத்துகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்போது இணங்கிகொள்ளப்பட்ட நாளாந்த கொடுப்பனவிற்கு மேலதிகமாக 50/- ரூபாவைக் கொண்ட மேலதிக படியை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.