• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹியங்கனை, வவுனியா, எம்பிலிபிட்டிய ஆகிய மூன்று மின்னறி உபநிலையங்கள் சார்பில் முதலீட்டாளர்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளல்
- 'சூரியபல சங்கிராமய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தேசிய பிரதான மின்வலையமைப்புடன் இணைக்கப்படும் 90 சூரிய மின்சக்தி நிலையங்களை தாபிப்பதற்காக மின்னறி உபநிலையங்கள் இனங் காணப்பட்டுள்ளன. ஆதலால் மஹியங்கனை, வவுனியா, எம்பிலிபிட்டிய ஆகிய மின்னறி உபநிலையங்கள் சார்பில் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக, தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுடன் மின்சக்தி கொள்வனவு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.