2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொரலந்த நீச்சல் தடாகத்தின் நிர்மாணிப்பு - வெலிமடையிலுள்ள பொரலந்த பிரதேசத்தில் பொரலந்த பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான காணித் துண்டொன்றில் 06 வரிசைகளுடன் கூடிய 25 மீற்றர் நீளம் கொண்ட நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள், பாடசாலை மாணவர்கள், அரசாங்க சேவகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை பயிலிளவல்கள், உயிர் பாதுகாப்பு நீச்சல் போதனாசிரியர்கள் சார்பிலும் பொலிஸ் மற்றும் ஏனைய சேவைகளின் பயிலுநர் உத்தியோகத்தர்கள் சார்பிலும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தும் பொருட்டு இந்நீச்சல் தடாகம் பயன்படுத்தப்படும். ஆதலால், கூறப்பட்ட கருத்திட்டத்தை 50 மில்லியன் ரூபா கொண்ட முதலீட்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |