• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி நானவலதொல நீர்மூல வளத்திற்குரிய நீர்போஷிப்பு பிரதேசத்தை பாதுகாத்தல்
- இரத்தினபுரி நானவலதொல நீர்மூல வளத்தின் ஊடாக சுமார் 89 ஏக்கர் வயல் காணிகளுக்கு நீர் வழங்கப்படுவதோடு, அதனோடு இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் கருத்திட்டத்தின் மூலம் 140 குடும்பங்களுக்கு நிர் விநியோகிக்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்த நீர்மூல வளத்திற்குரிய நீர்போஷிப்பு பிரதேசத்தை பாதுகாத்து பேணும் முக்கியத்துவத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ள இந்த காணியை கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.